Showing posts with label பூ பூக்கத்தானே செய்கிறது. Show all posts
Showing posts with label பூ பூக்கத்தானே செய்கிறது. Show all posts

Sunday, 20 December 2020

பூ பூக்கத்தானே செய்கிறது

எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு தினம்.

(21 டிசம்பர் 2018)

1996 இல் திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களை தற்செயலாக சந்தித்து இருக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

அந்த சந்திப்பின்போதுதான் கருணாநிதி அவர்களுக்கு தெரியும், வாடகை வீட்டில்தான் பிரபஞ்சன் இன்னும் வசித்து வருகிறார் என்பது !

சென்னையில்  மேன்ஷன்களிலும்,

வாடகை வீடுகளிலும்தான்

ரொம்ப காலமாகவே வசித்து வந்திருக்கிறார் பிரபஞ்சன்.

இதையறிந்த கருணாநிதி அவர்கள் ஆச்சரியத்தோடு கேட்டார்.

"என்ன சொல்கிறீர்கள் பிரபஞ்சன், இதுவரை நீங்கள் சொந்த வீடு வாங்கவில்லையா ?"

ஒரு நொடியும் சிந்திக்காமல் பிரபஞ்சன் இப்படிச் சொன்னார்.

"குங்குமம் இதழில் கதை எழுதினால் நூறு ரூபாய் கொடுக்கிறார்கள். இதில் எப்படி நான் வீடு வாங்குவது ?"

படைப்பாளிக்கே உரிய பரிகாசம்...!

ஒரு கணம் திகைத்துப் போன கருணாநிதி அவர்கள் உடனடியாக பிரபஞ்சனுக்கு வீடு வழங்க உத்தரவிட்டார்.

முதல்வருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டார் பிரபஞ்சன்.

ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். "வாடகை வீடு, மேன்சன் வாழ்க்கை, 

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் எப்படி இத்தனை அற்புதமான விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ?"

அதற்கு புன்னகைத்தபடி, 

தனது பிரபலமான அந்த வாசகத்தைக் கூறினார் பிரபஞ்சன்.

"எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் 

ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது !''

சந்திரா : பூ பூக்கத்தானே செய்கிறது