Sunday 23 August 2015

லிங்கூ, ஹைக்கூ

கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ  என்று  வித்தியாசமாக  வைத்தது சிறப்பு.  இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் கவிதைகளில் மிகவும் ரசித்த கவிதை.

---------------------------------------------------------------------

என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் 

பிச்சைக்காரன் !

---------------------------------------------------------------------

இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை 

அதற்குள் குடிபுகுந்து விட்டன 

குருவிகள் !

 ---------------------------------------------------------------------

நீ வடம் பிடிப்பதற்கு 

முன்னதாகவே 

நகர  ஆரம்பித்துவிடுகிறது தேர் !

---------------------------------------------------------------------

ஒரு சிங்கத்தைக்

காதலித்திருந்தால் கூட  இந்நேரம்

சொல்லியிருப்பேன் !

---------------------------------------------------------------------

இஸ்திரி போடும் தொழிலாளியின்

வயிற்றில் சுருக்கம் !

---------------------------------------------------------------------

நீ ஊரில் இல்லை

அதுதெரியாமல்

திருவிழா கொண்டாடுகிறார்கள் !

---------------------------------------------------------------------

ஆசையாய் வாங்கினேன்

புத்தர்  சிலை !   

---------------------------------------------------------------------

மயான  கூரையின்  மேல்

காக்கையின் சத்தம்

யார் வரப்போகிறார்கள் !

---------------------------------------------------------------------

நீ தினமும் 

பால்கனியில் அங்குமிங்கும் 

நடந்தபடி படிப்பாயே 

அது வரலாறு ! 

---------------------------------------------------------------------

இன்னும் கொஞ்ச நேரம்

கண்களை மூடி

வேண்டக் கூடாதா  !

---------------------------------------------------------------------

இப்போதெல்லாம்  

ரிங்  டோன்களில்  மட்டுமே

கேட்க முடிகிறது

குருவிகளின் சத்தம் !

---------------------------------------------------------------------

சுஜாதா

கவிதா பத்மா உஷா 

அப்புறம் கீதா 

இவை எல்லாம் 

வெறும் பெயர்கள் அல்ல.

---------------------------------------------------------------------

பூச்சி மருந்தில் பூச்சி 

உயிரோடு 

---------------------------------------------------------------------

அசோகர் இத்தனை மரங்களை நட்டார் 

அதில் ஒன்று கூட போதி மரமில்லையா 

---------------------------------------------------------------------

வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்

ஆப்பிள் விழுந்த கணத்தில் 

நியூட்டன் 

---------------------------------------------------------------------


No comments:

லிங்கூ, ஹைக்கூ - சந்திரா