சந்திரா #எமது மர மேசையில் இருந்து
Saturday, 16 January 2021
யார் இந்த பூம்பாவாய் ?!?
Friday, 15 January 2021
புதி(ரா/தா)னதோர் வரிகள் - வைரமுத்து
"எனக்கே எனக்கா" பாடலில் வருகிற, "Hai Re Hai Re Hai Rabba" என்பது உருது (urdu) வார்த்தை கடவுளை குறிக்குமாம்
Sunday, 3 January 2021
Super Deluxe - ஒளி ஓவியம்
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர், காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் - மாணிக்கவாசகர்
திருநங்கையா மாறின கணவனுடன் மனைவி பேசிட்ருக்காங்க, அவங்களோட குழந்தை பக்கத்துல விளையாடிட்ருக்கான், backdrop பூஜை அரை மற்றும் தூணில் சாய்ந்தபடி வீட்டின் முதுமை பாட்டி.
Thursday, 31 December 2020
ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு - நா. முத்துக்குமார்
வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார்:
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
‘‘டாக்டர்’’ என்றார்கள்
கோரஸாக.
இன்று கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை வரிசையில்
கவிதாவையும்;
கூந்தலில் செருகிய சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது பார்க்க நேர்கிறது.
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி நெய்யப்
போய்விட்டான்.
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்’’
கடைசி பெஞ்ச்
சி.என்.ராஜேஷ் சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன் நியூஜெர்சியில்,
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை ஆராய்கிறான்.
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு,
டி.என்.பி.எஸ்.சி. எழுதி
கடைநிலை ஊழியனானான்.
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் காற்று
எல்லோரையும்
திசைமாற்றிப் போட,
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராகப் பணியாற்றுகிறான்.
எப்பிடியிருக்கு மாப்ளே?’’ என்றேன்.
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையைப் பிடித்துக்கொண்டு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை!’’
என்றான்.
Sunday, 8 November 2020
சுஜாதாவின் அறிவியல் ஆளுமை
எந்திரன் படத்தில் ஒரு காட்சி வரும்
சிட்டி: உயிர் என்றால் என்ன
வசீகரன்: DNA என்ற மிகப்பெரிய மூலக்கூறு
சிட்டி: DNA வை வரைந்துவிட்டு "இதுதான் உயிரா" என்று கேட்கும்.
வசீகரன்: "உயிர் என்பது ஃபார்முலா இல்லை, பாக்டீரியாவுக்கு உயிருண்டு சோடியத்திற்கு உயிரில்லை" என்பார்.
சிட்டி: "எனக்கு உயிர் இருக்கிறதா ?" இந்தக் காட்சி பின்வருவாறு முடியும்.
சிட்டியின் மீது ஒரு மின்னல் அடித்து அதன் மூலம் சிட்டி தூரப் போய் விழும், ஆனால் அருகில் இருந்த வசீகரனுக்கு எதுவும் ஆகாது
"இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர் பொருள் என்பதை யும், உயிர் ஆக்கப்பட்ட பொருளயும் உணர்த்தும்"
Sunday, 18 October 2020
மணிரத்னம் மற்றும் ஷங்கர்- TravelRival
ஷங்கர் 1993ல ஜென்டில்மேன். சேம் ஹீரோயின்
மணி 1995ல பாம்பே எடுத்தார்.
ஷங்கர் 1996ல இந்தியன் எடுத்தார். சேம் ஹீரோயின்.
1997ல மணி, இருவர்.
1998ல ஷங்கர், ஜீன்ஸ். சேம் நாயகி. ஐசு.
1998ல தில்சே, மணி
1999ல ஷங்கர், முதல்வன். சேம் ஹீரோயின்.
2001ல ஷங்கர் நாயக் எடுக்கிறார். ராணி முகர்ஜி.
இந்த முறை மணி ராணியை வச்சு ஷாதியா எடுக்கிறார்.
2002ல மணி 5ஸ்டார்ங்கற 5மாணவர்கள் கதையை தயாரிக்கிறார்.
ஷங்கர் 2003ல 5மாணவர்களை வச்சு பாய்ஸ் எடுக்கிறார்.
2004ல மணி 3 ஹீரோவை வச்சு ஆயுத எழுத்து எடுக்கிறார். ஷங்கர் 2005ல ஒரே ஹீரோ மூணு வேடம். படம் அந்நியன்.
2007ல மணி சாதாரண மனிதன் பணக்காரனாமாறுன குரு எடுக்கிறார்.
2010ல ஷங்கர் பணக்கார சிவாஜி சாதாரணமா மாறுற சிவாஜி எடுக்கிறார்.
மணி ஐசுக்கிட்ட ராவணனுக்காக போறார்.
ஷங்கர் எந்திரனுக்காக போறார்.
அப்புறம் இரண்டு பேரும் லிங்காககிற இன்னொரு விஷயம். ARரஹ்மான். அவரோட அதிக ஹிட்சும் இந்த ரெண்டு பேரோட தான்.
Friday, 11 September 2020
பாரதி சிறுகுறிப்பு
பாரதிக்கு 'புதுச்சேரி' கொடுத்த 'கவிதை மகுடமும்”, 'கஞ்சா பழக்கமும்”
பாரதி கவிதையின் உச்சம் தொட்டது புதுச்சேரியில் வாழ்ந்த காலங்களில்தான்..அதே சமயம் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இறுதிகாலத்தில் சீரழிந்ததும் புதுச்சேரியில்தான்..'இந்தியா” வார இதழ் அரசாங்கத்தின் அடக்கு முறையின் காரணமாக நின்றுபோய்விட அதன் பின்னரே புதுவையில் பாரதியின் படைப் புகள் யாவும் 'காட்டாற்று வெள்ளம் போல...” கணக்கின்றி வெளிவரத் தொடங்கின.
வேதாந் தப் பாடல்கள், சக்திப் பாடல்கள்; பெண் விடுதலைப் பாடல்கள், சுய சரிதை, வசன கவிதை போன்ற தமிழின் உன்னதமான படைப்பு களும், 'கண்ணன் பாட்டு”, 'குயில்பாட்டு”, பாஞ்சாலி சபதம்” ஆகிய மூன்று சிறு காப்பியங்களும் ஏறக்குறைய இக்காலத்தில்தாம் வெளிவந்துதது..
மனித சமூகத்தின் விடுதலை வேட்கையையும், வாழ்வின் மகத்தான இலட்சியங்களையும், , நேர்ப்பட, அஞ்சாது பதிவுசெய்த இடம் புதுச்சேரி என்பதை அவனின் படைப்புகளே நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
வறுமையின் காரணமாக பாரதி, தன் வீட்டை ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியின் கோடியில் இருந்த 'விளக்கெண்ணெய்ச் செட்டியாரின்...” வீட்டுக்கு மாற்றிக் கொண்டுவிட்டிருந்தார். இந்தச் செட்டியார் பாரதியிடத்தில் வீட்டு வாடகை கேட்டதே கிடையாது. செட்டியார் வருவார். பாரதி பாடிக்கொண்டிருக்கும் பாட்டைக் கேட்பார். பிறகு மௌனமாய் வெளியே போய்விடுவார். பாரதி பேச்சுக் கொடுத்தால் ஒழிய செட்டியார் தாமாக ஒன்றும் பேச மாட்டார்.
இவரின் வீடுதான் பாரதிக்கு சங்கப் பலகை; கான மந்திரம்..அத்தகைய சிறப்புடைய விளக்கெண்ணைய்ச் செட்டியாரின் வீடு மட்டும் இல்லாது போயிருந்தால் பாரதியின் புதுச்சேரி வாசமும், அவனுடைய வாழ்க்கையும் பாழாய், பாலைவனமாய்ப் போயிருக்கும் என்பது நிதசர்னமான உண்மை…
வீட்டுத் தொல்லைகள் காரணமாகவும், அவற்றை மறக்கவும் புதுவை கடற்கரையில் பல நாட்கள் இரவெல்லாம் புலம்பியபடி கழித்தார்..:” தாயே பராசக்தி..! தீராத குழப்பம்.. எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!.
என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்...? எனது குடும்பப் பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சிப் புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது. ...” என கடற்கரையில் புகைத்துக்கொண்டிருந்த பாரதியைக் கண்டதாக வ.வே.சு.ஐயர், 'குறிப்பிடுகிறார்.. பாரதியாருக்குக் கஞ்சா சாப்பிடும் வழக்கம் புதுவை குள்ளச்சாமியின் பழக்கத்தால் ஏற்பட்டது...” என்றும் குறிப்பிடுகின்றார்.
அதுபோல, 'பாரதி புதையல்” மூன்றாம் தொகுதியில் பாரதியுடன் நெருங்கிப் பழகியவரும், புதுவையில் 'இந்தியா”, 'விஜயா”, 'கர்மயோகி” முதலிய பத்திரிகைகள் நடந்துவந்த காலத்தில் பாரதிக்குத் துணை புரிந்தவருமான பரலி சு. நெல்லையப்பர் எழுதியுள்ள கட்டூரையொன்றில் 'பாரதிக்கு வறுமையின் கொடுமையாலும், ஒரு சாமியாரின் கூட்டுறவாலும் புதுவையில் இருந்தபோது கஞ்சா பழக்கமேற்பட்டதும், அதனால் உடல் நிலை மோசமானது...” என்றும் அதனை உறுதி செய்கின்றார்.
இறுதிக்காலத்தில் யானை அடித்த காயத்தாலும்,கஞ்சா பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் நலிவாலுமே பாரதியின் உயிர் பிரிய நேரிட்டது..
பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை அவனுக்கு 'கவிதை மகுடத்தையும்”, 'கஞ்சா பழக்கத்தையும்” ஒரு சேர ஏற்படுத்தித் தந்தது அவன் வாழ்வின் விதியன்றி வேறு என்னவாக இருக்க முடியும்...?