அன்புள்ள சக கடவுள் தம்பி அன்பரசுக்கு,
நம் இருவரவுடைய சித்தாந்தமும் வெவேறாக இருந்தாலும், என்னை அண்ணனாகவே மதித்து எனக்கென்று நிரந்தரமான ஒரு உறவும், தங்கும் இடமும் தர இசைந்த உங்களுக்கு நன்றி!!
பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருந்தது இல்லை! நானும் ஒரு பறவை தான், நிரந்தரம் என்ற நிலையையே அசௌகரியமாக என்னும் பறவை. இருப்பினும் என்னிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு வீணாகக்கூடாது. அதையும் சேர்த்து உங்கள் மனைவியிடம் மொத்தமாக தாருங்கள்.
இனி என் பயணங்களில் நான் தங்கபோகும் கிளைகளில் அருமை தம்பியின் கணிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அனால், அடுத்த வினாடி ஓளிர்த்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி ஒரு ஆச்சரியம் தான்! ஆச்சரியம் நிறைந்த இந்த உலகின் மேல் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.
உங்களுக்கு திருமதி ஆக போகும் பால சரசுவதியின் வாழ்வில் ஏராளமான சந்தோஷங்கள் காத்திருக்கின்றன. அதற்கு முழு காரணமாக நீங்கள் இருப்பீர்கள் இருக்கவேண்டும்.
உங்கள் அன்பு அண்ணன்,
நான் சிவம்.
அன்பே சிவம்