Saturday 21 November 2015

ரிதம் - கண்ணகி

அந்த ஆட்டோக்காரர் என்னை ஏதோ கைகாமிச்சி சொன்னாரே… என்ன சொன்னாரு?

ஒன்னும் இல்லங்க…

இல்ல நிச்சயமா ஏதோ சொன்னாரு!

சொன்னா உங்களுக்கு கோவம் வரும்.

பரவாயில்ல.. சொல்லுங்க…

வேண்டாங்க எதுக்கு வம்பு!

சும்மா சொல்லுங்க…

இல்ல ட்ரெயின் ஸ்ட்ரைக் அன்னிக்கு உங்களை ஆட்டோல கூப்பிட்டதுக்கு நீங்க வரல. ஏன் வரலன்னு கேட்டான். கண்ணகி பரம்பரையாயிருக்குமுன்னு சொன்னேன்.. இன்னைக்கு ஒரே ஆட்டோல வந்தோமா.. ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களான்னு சிரிச்சிகிட்டே கேட்டான்.

அந்த ஆட்டோக்காரரை மறுபடியும் பாப்பீங்களா?

ஏன்?

பாத்தா சொல்லுங்க… உங்ககூட ஒரே ஆட்டோல வந்தாலும் நான் கண்ணகி பரம்பரைதான்.!!

Saturday 31 October 2015

நல்லதோர் வீணை செய்தேன்

தாசில்தார் அலுவலகத்தி நான் கண்ட ஒரு நிகழ்வு, என்னை யோசிக்க வைத்தது, நம் சுதந்திர இந்தியாவின் அரசு அலுவலகங்களின் பங்கு மிகவே அதிகம், நாம் ஒரு நாள் தாசில்தார் ஆபீஸ் சென்று நமது சாதி, நாட்டுரிமை, குடியுரிமை மற்றும் நமது வருமான சான்றிதழை பெற நீண்ட வரிசையில் 3 மேசைகளில் 3 விதமான அலுவலர்களை சந்தித்து அவர் அவர் விருப்பு வெருபுகளுக்கும் அடங்கி ஒடுங்கி நமதுஆவணங்களை கொடுப்பது மட்டும் இன்றி தேவை படும் வகையில் சில நேரம் நமது சில்லறைகளையும் கொடுத்து கடந்து தாசில்தாரிடம்
கையெப்பம் பெறுவது மட்டும் அல்லாமல் வெளியில் அமர்ந்து இறக்கும் attender இடம் சீல்லயும் பெற்று வீடு திரும்புவதென்பது ஒரு பாரத போர் தான்.

இருந்தாலும் நான் MCA படிக்க வேண்டுமே அப்பா வுக்கு இன்று ஆபீஸ் சென்றால் தான், பின்பு admission நேரங்களில் அவர் office இல் இருந்து லீவ் எடுக்க முடியும் என்ற கட்டாயம், நானும் சென்று பார்த்து உள்ளேன்

அது என்ன டா   கொடுமை ?
அந்த சான்றிதழ்கள் 6 மாசம் தான் செல்லுமாம்!!!!. நான் என்ன 6 மாசம்
ஒரு முறை வேற நாடுக்கு மாரிடுரென ?
இல்லை சாதி  மாரிடுரென  ?

அது மட்டும் அல்ல என் அப்பாவின் சம்பளம் 2 அல்ல 3 வர்சத்துக்கு ஒரு முறை தான் குடுதல்  வருமானம் வருது!  என்ன தான் இந்த ரூல்ஸ் ?
புரியல?

அனாலும் எனக்கு அந்த சான்றிதழ்கள் வேண்டும் அப்போதுதான் நான் MCA க்கு apply செய்ய முடியும்.

அன்று நீண்ட வரிசையுல சொல்லும் படி பார்த்தா 2 அல்லது 3 பேர் தான் என் முன்னாடி இருந்தாங்க, நான் Register சார் பார்க்கும் முன் கர்ணாவய்  பார்க்க நின்று கொண்டு இருந்தேன் எனது முன்னால் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்  ரவி, இவர் கால்கள் ஊனம் உற்றவர் இரு கைகளும் கிடையாது,  ஆனால் நல்ல முக தோற்றம், மிகுந்த தைரியத்தோடு B.Tech முடித்து M.Tech apply செய்வதுற்கு என்னை போல சான்றிதழ்கள் வாங்க வந்து
இருந்தார்,

அவர்யிடம் பேசிய போத சில அலோசனய்களை கேட்டேன் எங்கு படிக்கலாம், எவ்வாறு entrance மற்றும் அதன் admission கள் நடக்கும் என்று ?

அவர் MCA  இல்லை என்றலும் ஏறதழா B.Tech admission னும் மக admission னும்  ஒரே மாதிரி தான் நடக்கும், இவ்வாறு பேசி கொண்டு இருந்த போது உடனே சத்தம் போடாதிங்க பா என attender ஒரு 35 வயது
இறுக்கும் பெண் மினுக்கான நடையுடன் ஒரு பொது வாக சத்தம் போட்டபடி நடந்து சென்றால்.

நமக்கு தான் தெரியுமே அரசாங்க உத்தியோகம் என்றால் இப்படி தான், என்ன பதவி எங்கு இருக்கிறோம் என்று எல்லாம் கிடையாது, அரசு உத்தியோகம் ஒரு விதமான மேதாவி தனம் மற்றும் திமிரை வெளி
கட்டும் நான் அனைவரையும் சொலல்லை சிலரை தான்.  ஒரு வழியாக கர்ணா அவரை அழைத்தார் அவர் இடத்தில் தோலில் மாட்டிய படி ஒரு பை வைத்து இருந்தார், அதில் பாதி மட்டும் மூடப்பட்டு இருந்தது ஏன் என்பதை புரிந்து கொண்டேன் ?  அவர் மட்டும் வந்து இருந்தார் ஒரு வேலை முழுவதும் மூடி வைத்தல் எங்கு அடுத்தவர் உதவியை நாட வேண்டும் என்று பாதியாயை வைத்து இருந்தார் உள்ள இருந்து ஒரு ஒரு documents களையும் இரண்டு கைகளை ஒன்று சேர்த்து தேவை கேட்ப மாதிரிகளையும், மற்றும் ஒரிஜினல்களையும் காண்பித்தார்.  இதன் பிறகு அவரின் விவரங்களை வந்தவர்கள் சொல்லும் படி கேட்டு எழுதுவுது தான் வழக்கம், அதன் படி அவர் இடத்தில் அப்பா மற்றும் அம்மா எங்கே யாராவுது உன்னை அழைத்து வந்து இருக்கான்களா ? அவர்கள் இல்லை என்று கூறினர் ரவி.  உடனே கர்ணா Sorry தம்பி, தெரியாம கேட்டுட்டேன் சரி அவர்கள் பெயரை என்ன வென்று கேட்டார்?  sorry சார் தெரியாது என்றார்.  அவர் பின்னல் நான் நின்று கொண்டு இருந்ததை பார்த்து கர்ணா  என்னை இவர் உனது அண்ணா னா தம்பி என கேட்டார்,

உடனே ரவி இல்லை எனக்கு யாரும் இல்லை அப்பா அம்மா நான் பிறந்து இப்படி இருந்தேன் என்று தெரிந்து hospital இல் விட்டுட்டு போய்டங்கனு எனை கொஞ்ச நாள் வளத்த nurse ஆயா தான் சொணங்கா

ஒஹ் இல்லை தம்பி நான் எந்தா data வா வச்சி சான்றிதழ்கள் இப்ப  உனக்கு கொடுப்பேன் ????  என்று
கர்ணா கேட்டார் ?

அவர் கேள்வி சான்றிதழ்க்காக இல்லை, காசுகளுக்கு அடி போட்டது புரிந்தது L, எனது கண்கள் கலங்கியது காரணம் ரவி இன் பதிலா ? இல்லை Register கர்ணா வின் பதிலா ? இன்று வரை தெரிய வில்லை.

  - சந்திரா

Sunday 13 September 2015

ரேஷன் கார்டு - சுஜாதா

அதன் பாட்டுக்கு சமர்த்தாக இருந்த ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கார்ப்பரேஷன் அதிகாரி வந்து சொல்லிவிட்டுப் போனார். ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணம். பாஸ்போர்ட்டுக்கு அடுத்தபடியாக உங்கள் இருப்பை நிரூபிக்கக் கூடியது.

சாய்பாபா கோயில் அருகே ஜனசந்தடியின் மத்தியில் மாடியில் இருந்தது அலுவலகம். எனக்கு அத்தனை மாடி ஏறமுடியாது என்று நாகராஜை அனுப்பி வைத்தேன். சற்று நேரத்தில் அவன் ஒரு அலுவலருடன் திரும்பி வந்தான். "பழைய கார்ட ஜெராக்ஸ் பண்ணி வெச்சுக்கங்க. இந்த பாரத்தை நிரப்புங்க. ஒரு போட்டோ ஒட்டிக் கொடுங்க" என்றார்.

நான், 'நண்பா, நன்றி' என்றேன்.

'பத்து ரூபா கொடுங்க.'

'எதுக்கப்பா?'

'பாரத்துக்கு. இதை கொடுத்து டோக்கன் வாங்கறதுக்கு தனியா சார்ஜ் பண்ணுவேன்' என்றார்.

'ஏம்பா, இந்த பாரம் ப்ரீ இல்லையா?' என்று சொல்லிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தேன்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து, 'கார்ல வந்துருக்கே, பத்து ரூபாய் குடுக்கமாட்டியா?' ஏம்பா டிரைவர், இது பத்து ரூபாதானே பாத்துக்க' என்று சொல்லிவிட்டு, முகத்தை சுருக்கிக்கொண்டு சென்றார். லஞ்சம் வாங்குவது மட்டுமின்றித் திட்டிவிட்டு வாங்கும் சிப்பந்தி. அவர் கார்ப்பரேஷன் அலுவலரா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.

ஒரு சிறிய அரசாங்க அலுவலகத்தில் உள்ள சம்பாத்திய சாத்தியங்களை யோசியுங்கள். இலவசமாகக் கொடுக்கவேண்டிய விண்ணப்பங்களை ஒரு ஆள் கவர்ந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் பத்து ரூபாய் என்று ஒரு நாளைக்கு நூறு பாரமாவது விநியோகிப்பார். இதில் நிச்சயம் சிப்பந்திகளுக்குப் பங்கு இருக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் சம்பளம் கூடத் தேவையில்லை.

இந்த சதியை எதிர்த்து 'படிவம் இலவசம்தான். பணம் கொடுக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்யலாம். என்ன ஆகும்?

'உங்களுக்கு பாரம்தான வேணும்? நேரா கார்ப்பரேஷன் ஆபீஸ் போங்க. அங்க ரிப்பன் பில்டிங் பின்பக்கத்தில் காலைல பத்து மணியிலிருந்து பத்தேகால் வரைக்கும் தருவாங்க. போயி வாங்கிக்கங்க இலவசமா.'

'அதற்கு போக வர ஆட்டோ சார்ஜ் மட்டும் அம்பது ரூபா ஆகுமேப்பா?'

'பஸ்ல போங்க. 23G ல போய்டுங்க.'

அவன் சொல்லும் பஸ் திருவான்மியூரில் இறக்கிவிட்டாலும் ஆச்சரியமில்லை. நான் சொல்லவருவது இதுதான். நேர் வழிகள் அத்தனையையும் கடுமையாக்கி வைத்திருக்கிறார்கள். லஞ்சத்தை எதிர்ப்பதற்கு அசாத்தியப் பொறுமை வேண்டும்.

நன்றி: 'சுஜாதாவின் எண்ணங்கள்', தினகரன் தீபாவளி மலர் 2007.

Sunday 23 August 2015

லிங்கூ, ஹைக்கூ

கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ  என்று  வித்தியாசமாக  வைத்தது சிறப்பு.  இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் கவிதைகளில் மிகவும் ரசித்த கவிதை.

---------------------------------------------------------------------

என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் 

பிச்சைக்காரன் !

---------------------------------------------------------------------

இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை 

அதற்குள் குடிபுகுந்து விட்டன 

குருவிகள் !

 ---------------------------------------------------------------------

நீ வடம் பிடிப்பதற்கு 

முன்னதாகவே 

நகர  ஆரம்பித்துவிடுகிறது தேர் !

---------------------------------------------------------------------

ஒரு சிங்கத்தைக்

காதலித்திருந்தால் கூட  இந்நேரம்

சொல்லியிருப்பேன் !

---------------------------------------------------------------------

இஸ்திரி போடும் தொழிலாளியின்

வயிற்றில் சுருக்கம் !

---------------------------------------------------------------------

நீ ஊரில் இல்லை

அதுதெரியாமல்

திருவிழா கொண்டாடுகிறார்கள் !

---------------------------------------------------------------------

ஆசையாய் வாங்கினேன்

புத்தர்  சிலை !   

---------------------------------------------------------------------

மயான  கூரையின்  மேல்

காக்கையின் சத்தம்

யார் வரப்போகிறார்கள் !

---------------------------------------------------------------------

நீ தினமும் 

பால்கனியில் அங்குமிங்கும் 

நடந்தபடி படிப்பாயே 

அது வரலாறு ! 

---------------------------------------------------------------------

இன்னும் கொஞ்ச நேரம்

கண்களை மூடி

வேண்டக் கூடாதா  !

---------------------------------------------------------------------

இப்போதெல்லாம்  

ரிங்  டோன்களில்  மட்டுமே

கேட்க முடிகிறது

குருவிகளின் சத்தம் !

---------------------------------------------------------------------

சுஜாதா

கவிதா பத்மா உஷா 

அப்புறம் கீதா 

இவை எல்லாம் 

வெறும் பெயர்கள் அல்ல.

---------------------------------------------------------------------

பூச்சி மருந்தில் பூச்சி 

உயிரோடு 

---------------------------------------------------------------------

அசோகர் இத்தனை மரங்களை நட்டார் 

அதில் ஒன்று கூட போதி மரமில்லையா 

---------------------------------------------------------------------

வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்

ஆப்பிள் விழுந்த கணத்தில் 

நியூட்டன் 

---------------------------------------------------------------------


Sunday 17 May 2015

மே 17 - 2009

தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமுரும், 

கவிழ்ந்த இமைகள் ஓரு நாள் உயரும், 

இருகிய உதடுகள் ஓரு நாள் துடிதுடிக்கும், 

கருகிய பர்க்கள் ஓரு நாள் நறுநறுக்கும், 

அதுவரை நீங்கள் எங்களை ஆலுக 

அதுவரை உங்கள் வல்லம் ஒங்குக !!!

 


Credits: கன்னத்தில் முத்தமிட்டால் 



Sunday 22 February 2015

Corporate உலகின் ஒரு அத்தியாயம் - I



பதிப்பில் இருக்கும்  Corporate உலகின் ஒரு அத்தியாயம் - II  ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்,  இரண்டாம் அதியாயத்திருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

        Corporate உலகம் ஒரு விதமான பெரிய சொர்கம் என்றும் சொல்லலாம், ஆனால் நாம் யாரும் சொர்கத்தை பார்த்த்தது கிடயாது, எல்லாம் ஒரு யூகம் தான்,  சரி இந்த corporate வாழ்க்கை எப்படி இருக்கும்?, currency வாசம் வீசும், மேலே போட்டு இருக்கும் perfume களை  விட, அங்கு அங்கு ஆடைகளும் உண்டு, அணிகலன்கள் குறைத்த்து, சூரிய வெளிச்சம் கூட காண முடியாத ஒரு வாழ்க்கை எல்லாம் Online வாழ்க்கை தான்! உறவுகள் உட்பட, உணவு பழக்கம் கூட புதிதாய் பார்ப்பவர்களுக்கு எப்படி சாப்பிடுவது என்று? யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும், தவறா சொல்லலே அதுவும் உணவு தான்!  

இந்த உலகில் சந்தோஷம் அல்லது வருத்த்தமும் அவர்களின் style இல் outing என்று கூறி hotel, resorts, beach house அரட்டை! இது தான் அவர்கள் வாழ்க்கை, சும்மா சொல்லலா, அவர்களும் ஒரு A/c ரூம் விவசாயிக்க்கள் தான், working நாட்களில் clinet, error, bug fix, support, குறைகள், காரணம் என்று பல விதமான நெருக்கடிகளில் வாழும் வர்கம் தான்.

 இப்படி தான் நமது  சக்கரவர்த்தி பெயரிலேயே தெரிந்து இருக்கும் நம் கிராமத்து பக்கம்  வாழ்ந்து வளர்ந்த இளைஞன், இந்த corporate உறவுகள் அதை மாற்றி சக்ரா என்று அழைக்க ஆரம்பித்து  விட்டார்கள், அன்று அவனுக்கு முதல் outing, வேறு எங்கு, நீண்ட நெடுங்சலை, ECR Beach house தான், companyin புது project sign off, அதை கொண்டாடும் வகயில் காரணம் வேண்டுமே! 

சரி … சக்ரா விற்கு ஆங்கிலமே கொஞ்சம் ஏன், ரொம்பவே தடுமாற்றும், பின்பு இந்த பழக்கம், இடம், ஆட்கள், பார்க்கும் பழகும் மக்கள், அனைவரின் கால்களில் கலர் கலர் shoes. பளிச்சுனு சட்டை, லூஸான பணியங்கள், முட்டிகல்கள் வரை இருக்கும் pant, ஒருபுறம் modern phone photo எடுத்து உடனுக்குடன் Facebook update,  முக்கியமாக ஆண்களா பெண்களா என்று அடையலாம் கண்டு பிடிப்பது கடினம் ???… எல்லாமுமே புதிதாகவே இறுந்தது  இதனை விழித்த படி பார்த்து அமர்ந்து இருந்தான் சக்ரா,  சமயத்தே   இதை கண்டும் காணாத வகயில் phone இல் ஊருக்கு பேசுவதாக சில இடங்களில் இருந்து விலகி விலகி சென்று சமாளித்தான்  

நமக்கு தெரியுமே எல்லா இடத்திலும் நாம் ஒரு முறையாவுது இப்படி ஒரு சங்கடத்தில் இருந்திருப்போம் சரி இப்படி பட்ட இடத்தில் யாரவுது ஒருவரை வைத்து பொழுதை கழிப்பதாருக்கு ஒரு கூட்டம் காத்து கொண்டே இருக்கும், கண்டிப்பாக மத்தியில் நமது company இன் சுமார் மற்றும் super அழகிகளின் நடுவே ஒரு சில manager கல், மற்றும் சில lead மற்றும் அவர்களுக்கு தோதான engineer களும் சூழ ஒருவரை ஒருவர் கேலி பேசுவார்கள் ஒருவர் பற்றி பேசும் போது மற்றும் ஒருவரை அந்த பேச்சில் சேர்த்து விட்டு,  தப்பிப்பது வழக்கம்.  இதில் சில manager கல் மற்றும் சிலர் அவர்களின் குடும்பத்துடனும் வருவார்கள். அன்று சக்ரா அந்த கூட்டத்தின் பேச்சில் சிக்கினன், ஒரு manager style ஆக english இல் அவனை ஏதோ சொல்லி கிண்டல் அடித்தார் அனைவரும் கூபீர் என்று சத்தம் ஆக சிரித்தனர். சற்று கவனிக்காத அவன், அவர் சொன்னது புரியலை என்ன சொன்னார் என்று அருகில் இருந்த ஒரு நண்பரிடம் கேட்டான், அதற்கு அவனும் சில comment போட, இருக்குற அனைவரும் கூபீர் என்று சிரித்தனர். சக்ரா விருக்கு புரியவில்லை, ஆனால் நாமலேயே target பண்றாங்க என்று தெரிந்தது.  


உடனே அந்த manger என்ன சக்ரா english தான் இது புரியலயா என்று சிரித்த படி கேட்டார், அதற்கு சக்ரவர்த்தி இல்லை சார் இப்பதான் english கடலில் கால் நினைக்க ஆரம்பித்து இருக்கேன்?  விரைவில் கற்று கொள்வேன் என்று பரிதாபாக கூறினான், அதற்கு அந்த manager முக புருவங்களை தூக்கி ஒரு விதமான சிரிப்பை வெளிப்படுத்தி விலகினார், சக்கர விற்கு புரிந்தது அந்த சிரிப்பு, உடனே அங்கே அந்த manger க்கு தோதாக வேறு எந்த மொழி தெரியும் உனக்கு என்று ஒரு பெண் குரல்- மலயல்தில், அவன் பின்புறம் இருந்து அதே சொற்கள் ஆனால் தெலுகில் இருந்து ஒருவர், கூட்டத்தில் மற்றும் ஒருவர் அதே சொற்களை bengali இல் கூற, மற்றும் ஒருவர் அதே சொற்களை ஹிந்தியில் கூற சக்ரா விருக்கு ஒன்றும் புரியாம நிற்க, கூபீர் சிரிப்பு உடனே அந்த பக்கம் ஒரு குரல் உங்கள் Lunch ready Guys... உடனே சிரித்த படியே கூட்டம் நகர்ந்தது. சக்ரா வும் சரி நமக்கு தெரியவில்லை ? என்று ஆனாலும் இப்படியா செய்வார்கள் என்று ????  அவனும் சாப்பிட அவர்களுடன் சென்றான்.

            Manager கள், மாட்டிரும் lead கள் அவர்களின் குடும்பத்தினரை மற்றவர்களுக்கு அறிமுகம் படுத்திவைத்து உணவு சாப்பிட தொடங்கினார்கள். அங்கு ஒரு சிறுமி அமைதியாக அமர்ந்து இருந்தால், யாருடனும் பேசாமல், அது அந்த முக்கிய Manager இன் மகள், சக்ரா விடும் ஏளனமான சிரிப்பை வெளிப்படுத்தி, கிண்டலாக கூட்டத்தை பேசவைத்தவர். அவள் அருகே சென்று சில நேரம் பேச்சு கொடுக்க செய்தான் சக்ரா ஆனால் அவள் பேச வில்லை, உடனே அதை கண்ட அந்த Manager சக்ரா என சொல்ற ? கேடாக, இல்லை சார் எதுவுமே பேச மாற்ற, சக்ரா, சார் னு சொல்லாத னு பலமுறை சொலிருக்கேன், just call me Sanjay, சார் உங்க experience தான் என் வயசு அதான் கூப்பிட ஒரு தயக்கம், அதன், ohhhh… போதும் இதெல்லாம் வேண்டாம் change that சக்ரா? னு சொன்னார் அந்த Manager, okay சார். Dai…. Soon you need to change this Chakraa னு கூறி அவனுடன் நடந்து கொண்டே அவளுக்கு பேச முடியாது, மற்றும் நாம பேசுறதும் அவளுக்கு கேட்காது so அதன் இப்படி இருக்கா,  அவங்க அம்மா அங்கே பேசிட்டு இருக்கா so அவ வந்து அவல சமாளிப்பா இங்க எல்லாரும் இருக்காங்களா அவங்களோடு பேசு … Don't tell this to anybody for now ? But I hope everybody knows about this!  so only they are not ready to go and talk with her?, if you  remind them means they will talk about me with this issues ? better  you go and eat . உடனே சக்ரா என்ன சார் ???    இருங்க என்று அந்த  குழந்தை இடம் சென்று தன் கைகளை அசைத்து Sign Language இல் பேச ஆரம்பித்தான் சிரித்த படி, அவளும் தன் கைகளை அசைத்து sign language பதில் கொடுக்க, ஒரு சில நேரத்தில் அந்த  குழந்தை சத்தமாக சிரிக்க இருவரும் ஏதோ கைகளில் அசைத்து சந்தோஷமா பேசுவதை கண்டு அந்த கூட்டம் அமைதியாக பார்க்க ஆரம்பிச்சிது? இம் முறை ஒரே ஒரு சிரிப்பு சத்தம் அது அந்த குழந்தை அமுதாவின் குரல் தான் !!!!!... கூட்டம் வாய் அடைத்து பார்க்க!!!  

Sanjay, hi சக்ரா உனக்கு இது எல்லாம் தெரியுமா, என்ன சார், எனது தங்கையும் இப்படி ஒரு குறையால் இருந்தால் அப்பொழுது இதை கற்று கொண்டேன், நமக்கு தேவையான ஒரு மொழியை கற்று கொல்ல வேண்டியது  அவசியமே தவிர எல்லா மொழியும் தெரிந்து இருக்க வேண்டும் இல்லை ? உங்களுக்கு ஹிந்தி, English, மலயாளம், தெலுகு என்று தெரிந்தும் உங்கள் குழந்தை யுடன் பேச அது தேவை பட்டதா, ???? இப்படி தான் நாம் பலமுறை நம் project லயும் வேலை செய்கிறோம் என்று சிரித்த படி, பேசினான், அங்கு முழுதும் அமைதியாக, அந்த குழந்தை யின் சிரிப்பு மட்டுமே கேட்டது!!!!!

 -    சந்திரா

பதிப்பில் இருக்கும்  Corporate உலகின் ஒரு அத்தியாயம் - II  ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்,  இரண்டாம் அதியாயத்திருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது
2015 - சந்திரா