Saturday 5 March 2016

ஜன்னல் வழியே


அன்று மாலை 6:35 மயிலாப்பூர் ரயில் நிலையம், வந்து நின்ற வண்டியைத் தள்ளி செல்லும் அளவுக்குக் கூட்டம்  திருவிழா போல் தோன்றியது, ஆமாம் அன்று கபலிஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா, கடைசி பெட்டியில் குடும்பத்துடன் 12 பேரையும் ஏறு ஏறு  என்று உரக்கக் குரல் கொடுத்து, உள்ளே சென்று உட்கார இடம் தேடினர் நமது சிதம்பர சங்கர ராம ஐயர்.  ஆனால் பெட்டிக்குள் நமது குறவன் குறத்தி மார்கள் முழுதாக பெட்டியை ஆக்கிரமித்து இருந்தார்கள் மற்றும் அவர்கள் பணியில் சத்தம் போட்ட பாடிப் பேசி சிரித்து இருந்தனர்.  இதனைப் பார்த்து யோசிக்கும் முன்பே ரயில் மெல்ல நகரத் தொடங்கியது, சகிக்க முடியாமல் மேல்  கம்பியை பக்கத்தில் இருப்பவரிடம் ஷேர் செய்தார்.

அவர்களைக் கண்டு நமது சங்கர  ராமன்  தனது  கோபத்தைக்  குடும்பத்தினர் மீது கட்டினர், உங்களால் தான் இவளவு நேரம் ஆகியது. ஈஸ்வரா இதுவரை 8 ரயில்களை விட்டாயிற்று இதையும் விட்டா ஆத்துக்கு போக நிறைய நேரம் ஆகிடும் இங்கு இருந்து மத்திய கைலாஷ் போய், அங்கு இருந்து through பஸ் சிதம்பரதிருக்கு கடைச்சா பரவலா, இல்லை என்றால் பாண்டிச்சேரி  போய்டு அங்கு இருந்து ஊருக்கு  போகவேண்டும். எப்படியும் நாளை விடிஞ்சிரும்.  இத்துள இந்த பீடய்களுடன், பாண்டிச்சேரி  சென்றால் தண்ணி வண்டி தான் என்று புலம்பி கொண்டே ஜன்னல் வழியே கபலிஸ்வரர் கோயில் கோபுரத்தைத் தரிசனம் செய்யத்  தேடினர், ஆனால் தென் படவில்லை இருந்தாலும் கண்ணை மூடிக் கும்பிட்டு கொண்டார்.

வண்டி மந்தைவெளியைத் தாண்டா, சங்கர ஐயர் சத்தம் போட்டபடி, குறவன் குறத்தி மார்களின் பிள்ளைகளை அதட்டி நகர்ந்து செல்லுங்கள்  மேலே விழுந்து வைக்க போறிங்கள்.  குறத்தி ஒருத்தியின் பெண்பிள்ளை ,  இல்லை சாமி நீங்க ஆச்சாரமான ஆளுங்கள், வண்டி குலுக்கலா மேலே பட்டு இருக்கலாம், நாங்கள் வேண்டும் என்று செய்ய மாட்டோம் சாமி என்று பொறுமையாக பேசினால், அதற்கும் சங்கர ஐயர் முகதோற்றதை கோவமாகவும்  உதடுகளை முணுமுணுத்தபடி  பகவானே என்று கூறி திரும்பினர்.

பின்னர் பட்டினப்பாக்கம் ஸ்டேஷன் நெருங்க, ஐயர் இவர்களைப் பார்த்து கோபத்துடன் எங்கேயாவது இந்தக் கூட்டத்திற்கு அறிவு இருக்க, இவ்வாறு ஒரு ரயில் பெட்டியை ஆக்கிரமித்து வரோமே, நாம் இருந்த மத்தவங்க எப்படி வருவாங்கனு யோசிக்குதுங்கள , புலம்பல் சத்தம் அவர்களின் காதுகளில் விழ.  அதைக் கேட்ட அவர்கள் சாமி நாங்களும் மனிதர்கள் தான், காலையில் இருந்து அலைஞ்சு, திரிஞ்சு, கடைசி பெட்டியில் வந்து உட்காந்து இருக்கிறோம், ஏன் சாமி எங்களுக்கு இங்கேயும் இடம் இல்லையா?  உங்களை மாதிரி யாண அலுங்கல் எங்கள் மதிச்சாதான் மத்தவங்களும் எங்களையும் மனிதர்களா பார்பாங்க.  நீங்க எல்லாம் கடவுளுக்கு சேவை செய்றவங்க, உங்களை எல்லாம் நாங்கள் பெரிய எடத்துல வச்சிபாக்குறோம்

ஐயர்: அம்மம் அம்மம், சிதம்பரத்தில் இருந்து அதுக்கு தானே வந்தேன் பாரு? அங்கு இருந்த குறத்தியின் குழந்தையைப் போ போ தள்ளிப் போ என்று அதட்டினர்

குறவர் ஒருவர்: என்ன சாமி நீ? உங்களை மாதிரி சிலர் இருக்க, எங்களைப் பலர் மதிக்க மாற்றங்கள்.  நாங்களும் சக உயிர் தான். நீங்கள் கும்பிடும்  கபலிஸ்வறருக்கு படம் கற்று கொடுத்தவரின் வர்க்கம் நாங்கள்.

ஐயர்:  அட பிரமாதம், நல்ல வாய் அடிக்கிற கூட்டம்  ச்சா சானு  தள்ளி ஒதுங்கினர்.

கோட்டுர்புரம் ஸ்டேஷன் நெருங்க, வண்டிக்குள் 6 இராணுவ வீரர்கள் ஏற முற்பட்டார்கள், அதைக் கண்ட ஐயர்r, ஈஸ்வராஹ், இவர்கள் வேற பெட்டியில் இடம் இல்லை அடுத்த ரயிலை பாருங்கள் எறங்குங்க முதலில்
எறங்குங்கனு  சத்தம் போட்டார்.  பின்பு வேற வழி இல்லாமல் போய் தொலையுங்கள், ஆத்துக்கு போய் மொத்ததுல தலை முழுகனும்னு என்று போலம்பினர்.

இராணுவ உடையுடன் துப்பாக்கி வைத்து இருந்த 6 பேர்களும் பெட்டியின் வாயிலில் தொங்கிய படி நிற்க, முற்பகுதியில் நம்மவர்கள் எல்லாம் ஒய்யாரமாக உட்கார்ந்தும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தும் நிற்க.
உள்ளே இருந்து குரவர்கள் கூட்டம்  சாமி அவர்களை இங்கே கூப்பிடுங்கள் அய்யா, இங்க வாங்க உட்காருங்கனு பெரிய கோஷம் போட்டபடி குபிடனர், நாங்கள்  நிக்கறோம் வாங்க அய்யா நீங்க உட்காருங்கனு கையை பிடித்து அழைத்தனர்

சற்றே கோபம் அடைந்த  ஐயர், இங்க பலர் நிற்க அவர்களுக்கு இடமா துப்பாக்கியை  பார்த்ததும் பயம், போன ஸ்டேஷன்ல  நான்  பெசியதுற்கு எதிர்த்து பேசிட்டு, அதான் உங்களுக்கு எல்லாம் பயம் புடுதுற மாதிரி ஆட்கள் இருந்தா தான் அமைதியா ஆவிங்க.

குருவன்:  சாமி, எங்களுக்கு எதற்குப் பயம்.  வீடா? வாசலா?, கிடைக்கும் இடம் சொர்க்கம் அவளவுதான்.   இவர்களும்  எங்களைப் போல தான்! இது பயம் இல்ல சாமி மரியாதை.  நாட்டுக்கு வெளியில் நின்று தான் நம்மளவங்காள  பத்துகுரங்க, இங்கயாவுது உள்ள நிம்மதியா உட்காரட்டுமே  ஏன் இங்கையும் வெளியே ஆபத்துல நின்றுகொண்டு வரனும்,  நியாயபடி உங்களவர்கள் முன்வரிசையில் இடம் கொடுதருகனும், பாவம் உங்களுக்கு ஏதோ அசதி  போல , அதான் நாங்கள் இடம் கொடுத்தோம்.

ஐயர், முகம் வாடிப் பேச வார்த்தை இன்றி,  குறத்தி மகளைத் தூக்கி கையில் வைத்து அவமானத்தில் தலை குனிந்து  ஈஸ்வரா என்று கண்களை மூடித் திறந்தார், மத்திய கைலாஷ் ஸ்டேஷன்,  ஜன்னல்  வழியே  கைலாசநாதர் கோபுரம் தரிசனம் கிடைய்தது வண்டியில் இருந்து படியில் இறங்க, கேழே பஸ்  ஸ்டாப் இல்  சிதம்பரதிருக்கு through பஸ்  காத்து  இருந்தது.

- சந்திரா

No comments:

ஜன்னல் வழியே - சந்திரா