Saturday 16 December 2017

சுஜாதா தாட்ஸ் பற்றி கரு. பழனியப்பன்

சுஜாதா தாட்ஸ் பற்றி ஒரு மேடையில் இயக்குனர் - எழுத்தாளர்
கரு. பழனியப்பன் அவர்கள் கூறியது

சுஜாதா 
1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம். கேள்வி கேட்காதா நம்பிக்கை, ஏன் என்றால் அரசியல், விஞ்ஞானம் எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டே குழம்பி நிற்கிறது

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது. காபி பவுடர் வாங்குவதிற்கும், சில்லரை சாமான் வாங்குவதற்காக இருக்கலாம்.
கரு. பழனியப்பன்

3. மூனு மணி ஆரம்பிக்கும் மேட்னி ஷோ போகாதீர்கள். படிப்பு கெடும், தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், இதில் காதல், கதை அடங்காது.

5. குறைந்த பச்சம் ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள், அப்பாவிடம் ஜீன்ஸ், டி-ஷர்ட் கேட்பதற்கு முன்பு

6. உங்களுக்குக் கீழே உள்ள சராசரி அடித்தட்டு மக்களைப் பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு - பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும், கண்டிப்பாகக் காதல் மட்டும் வேண்டாம், ஏன் என்றால் காதல் தேவை இல்லாத சில இடங்களில் காத்திருக்க வைக்கும், பலர் கண்ணில் அகப்பட்டுக் கொள்வோம்

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள், எதயவுது ஆர்வத்துடன் விளையாடுங்கள், இதில் கம்ப்யூட்டர் கேம்ஸ் அடங்காது. வியர்வைச் சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும், வீண் சிந்தனைகள் வராது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். அதிக பச்சம் ஒன்பது : ஐந்துக்கு எல்லாம் வீடு சேர்ந்துருங்க, ஏன் என்றால் இரவு தான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள். நடந்தது, நடக்காதது எதையாவுது பேசி நேரத்தை செலவிடுங்கள்

இதில் ஏதாவது ஒன்றைத் தினம் செய்து வாருங்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்

No comments:

சுஜாதா தாட்ஸ் பற்றி கரு. பழனியப்பன் - சந்திரா