
நெல்லை மாவட்டத்தில் அகால மரணமடைந்துவிட்ட ஓர் இளைஞனின் இழவு வீட்டில் கூடியிருக்கும் கூட்டம், கையில் சொம்புத்தண்ணீருடன் வீட்டிலிருந்து வெளியேவந்த கிழவியைப்பார்த்ததும், அமைதியாகிவிடுகிறது. கிழவி அனைவர் முன்னிலையிலும் மூன்று பிச்சிப்பூக்களை அதில் இடுகிறார். கூட்டத்திலிருந்து ‘ம்..பாவம் என்னத்த சொல்றது’ என்று அனுதாப முனகல்கள் வெளிப்படுகின்றன. மூதாட்டி பூக்களை எடுத்துக்கொண்டு தண்ணீரைக்கீழே கொட்டிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். அதன் அர்த்தம் இறந்தவனின் மனைவி மூன்றுமாத கர்ப்பம் என்பது. செத்தவனுக்கு எப்புடி புள்ள வந்துச்சு என்ற கேள்வி பின்னால் வராமலிருக்க ஒரு வார்த்தைகூடப் பேசாமலேயே செய்யப்படும் பண்பாட்டு அசைவு அது என்கிறார்.
No comments:
Post a Comment