Sunday 17 April 2022

சினிமாவுக்கு போன சித்தாளு

"சினிமாவுக்கு போன சித்தாளு" ஒரு நாவல்.

சினிமா மோகத்தால் ஏற்படும் பாதிப்பைப்  பற்றிய கதை ! 

யார் பெயரையும் குறிப்பிடாமல்தான் எழுதியிருந்தார் எழுத்தாளர் .

ஆனால் இந்தக் கதையை எம்ஜிஆரை தாக்கித்தான் எழுதி இருக்கிறார் என்று சிலர் எம்ஜிஆரிடம் போய் சொல்ல…

அடுத்து நடந்ததுதான் எவருமே எதிர்பாராதது !

எம்ஜிஆர் வீட்டிலிருந்து எழுத்தாளருக்கு  ஒருநாள் சூடான அழைப்பு வந்ததாம்: 

“தலைவர் உன்னைப் பார்க்கணும்னு சொல்றார்.” 

அதே சூட்டில் எழுத்தாளர் சொன்ன பதில்:  “சரி. வரச் சொல்..!” 

அவர்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் !


No comments:

சினிமாவுக்கு போன சித்தாளு - சந்திரா