Saturday 21 November 2015

ரிதம் - கண்ணகி

அந்த ஆட்டோக்காரர் என்னை ஏதோ கைகாமிச்சி சொன்னாரே… என்ன சொன்னாரு?

ஒன்னும் இல்லங்க…

இல்ல நிச்சயமா ஏதோ சொன்னாரு!

சொன்னா உங்களுக்கு கோவம் வரும்.

பரவாயில்ல.. சொல்லுங்க…

வேண்டாங்க எதுக்கு வம்பு!

சும்மா சொல்லுங்க…

இல்ல ட்ரெயின் ஸ்ட்ரைக் அன்னிக்கு உங்களை ஆட்டோல கூப்பிட்டதுக்கு நீங்க வரல. ஏன் வரலன்னு கேட்டான். கண்ணகி பரம்பரையாயிருக்குமுன்னு சொன்னேன்.. இன்னைக்கு ஒரே ஆட்டோல வந்தோமா.. ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களான்னு சிரிச்சிகிட்டே கேட்டான்.

அந்த ஆட்டோக்காரரை மறுபடியும் பாப்பீங்களா?

ஏன்?

பாத்தா சொல்லுங்க… உங்ககூட ஒரே ஆட்டோல வந்தாலும் நான் கண்ணகி பரம்பரைதான்.!!

No comments:

ரிதம் - கண்ணகி - சந்திரா