Sunday 19 August 2018

பாரதி சிறுகுறிப்பு - வ.உ.சி.யை வாழ்த்தியவன் - மக்களின் செயலறிந்து இகழ்ந்து நொந்தான்

‘வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ!’
என்று சிறைசென்றபோது வ.உ.சி.யை வாழ்த்தியவன் பாரதி. சிறையிலிருந்து வெளிவந்தபோது, அந்த மகத்தான மனிதனை நாடு மறந்துவிட்டதைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் நிலைகுலைந்தது பாரதியின் இதயம்.

‘பிள்ளைவாள்,
அந்தக் கப்பல்களை
வெள்ளைக்காரனுக்கே
விற்றுவிட்டார்களாமே…
அதைவிட
சுக்கல்சுக்கலாய் உடைத்து
கடலில் கரைத்திருக்கலாமே…’
என்று கொதிக்கிறான் பாரதி, தன்னைப் பார்க்க புதுச்சேரிக்கு வந்த வ.உ.சி.யிடம்!

‘மாமா, உங்களுக்குத் தெரியாதா,
மானங்கெட்ட நாடு இது’ என்கிறார் வ.உ.சி.

‘நாட்டை இகழாதீர்கள்…..
மானம் கெட்ட மக்கள் பிள்ளைவாள்…’
என்று அந்த நிலையிலும் திருத்துகிறான் பாரதி, தேசத்தை விட்டுக் கொடுக்காமல்!

அதற்குப் பிறகாவது நாம் திருந்திவிட்டோமா? மனம் நொந்துபோய், பாரதிக்கே அதைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது…..

‘நாங்கள் மானங்கெட்ட மக்கள், பாரதி!’

https://www.commonfolks.in/books/d/bharathi-kaithi-enn-253
Courtesy: http://irruppu.com/?p=93384

No comments:

பாரதி சிறுகுறிப்பு - வ.உ.சி.யை வாழ்த்தியவன் - மக்களின் செயலறிந்து இகழ்ந்து நொந்தான் - சந்திரா