Thursday 26 September 2019

அதான் நாகேஷ்

நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களின் பிறந்த நாள் (27-09-1933) 

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காமெடி, நாகேஷ் உயிரோடு இருக்கும் போதும் எந்த விருதும் தராமல் இருந்துவிட்டது நம் அரசு என்று நம் பத்திரிக்கைகள் எல்லாம் இப்போது புலம்புகின்றன. அதற்கு அவசியமே இல்லை, ஏனென்றால் ரசிகர்களின் நெஞ்சில் அவருக்கு இருக்கும் ஒரு அசையாத இடமே எல்லா விருதுக்கும் மேலானது.

நாகேஷின் இன்டர்வ்யூ ஹிந்து நாளிதழில் 2007 ம் வருடம் வந்தபோது , நாகேஷ் சொன்ன ஒரு விஷயம் அவர் நடிப்புக்கு அப்பாற்பட்டு ஒரு புத்திசாலி என்பதை நிரூபிக்கும்.

வாழ்க்கை மூன்று தளங்களில் இயங்குகிறது -

1) நீங்கள் விரும்பும் ஒன்று எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.

2) உங்களுக்கு குறிப்பிட்ட ஒன்று பிடிக்கவில்லை, ஆனால் நான் அதை விரும்புகிறேன். அதனால் உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.

3) நீங்கள் எதையாவது விரும்புகிறீர்கள். அது எனக்கும் நிறைய பிடிக்கும்,  அதனால் உங்களுக்கு என்னை பிடிக்காது.

எனவே எப்படியிருந்தாலும், நம்மை விரும்பாதவர்கள் எப்போதும் இருப்பார்கள். நாம் விரும்பியதைச் செய்துவிட்டு முன்னே செல்ல வேண்டும்.

No comments:

அதான் நாகேஷ் - சந்திரா