Sunday 27 October 2019

சுஜாதா'ஸ் படைப்பில் இருந்து

மிகவும் பிடித்த சுஜாதாவின் உரையாடல், அதற்கேற்ப காட்சி பதிவும் கூட (மணிரத்னத்திற்கும், ரவி கே சந்திரனுக்கும் ஒரு Gosh), நான் சிக்கிய சேனல் நிகழ்ச்சிகளுக்கு இடையே அத்திப்பூவை தோன்றியது.

இது சின்ன ஒரு Bike Drop Scene என்ன ஒரு 1 இல் இருந்து 2 நிமிடம் வரும் காட்சி, இதில் இவ்வளவும் சொல்லமுடியுமா???  கதாநாயகனின் அறிவையும், அவன் பால் கொண்ட காதலியின் நல்ல காதலையும், காமத்தின் அறிவியலையும் அனைத்தையும்  கொண்டு சென்று சமுதாயத்திற்கு மூன்று முடிச்சு போட்டுயிருப்பர்.

    மைக்கில் வசந்த் ஆக சூர்யா ; கீதாவாக ஈஷா தியோல்
"வீட்ல என்னடான்னா வேண்டாத ஆள கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. வேண்டிய ஆளு கல்யாணமே வேண்டாங்குறாரு" 
"உன் பெட்டியை எடுத்திட்டு என் வீட்ல வந்து இரு"
"எங்க? உன்  தங்கை ரூம்லயா அம்மா ரூம்லயா""என் ரூம்ல" 
"கல்யாணம் பண்ணிக்காமயா! பச்சை பாவம்"
"இதுல என்ன பாவம்! காதல் மட்டும் பாவமில்லையா" 
"காதல் புனிதம். பியூர் டிவைன்"
"காதல்னு ஒன்னு கிடையவே கிடையாது. doesn't exist""என்ன back அடிக்கிறியா" 
"நாம பொறந்ததெல்லாம்... நாமனா, நான், நீ, இதோ இந்த பச்சை சட்டை, மஞ்ச சுடிதார், இதோ இந்த போலீஸ்காரர் எல்லாரும் பிறந்தது எதுக்காக? இந்த காதல் கீதல் கண்ணீர் பாட்டு ஓவியம் இதெல்லாமே இருட்டுலயும் ஹோட்டல்லயும் பார்க்லயும் பெட்லயும் முடியுறதுக்காக. எல்லாம் ஹார்மோன் சம்பந்தப்பட்டது. ஹைட்ரொஜன், ஈஸ்ட்ரோஜன், டெஸ்டெஸ்ட்ரோன்,  ப்ரோஜெஸ்ட்ரோன் வெறும் ஓர்கானிக் கெமிஸ்ட்ரி. எக்ஸ் கிரோமோஸோம், வை க்ரோமோசோம், எக்ஸ் எக்ஸ், எக்ஸ்-வை . அவ்ளோதான் மேட்டர். 
கல்யாணங்கிற இன்ஸ்டிடியூஷன்லாம் சும்மா. சொஸைட்டிக்காக,, ஊர்ல ஒத்துக்கணும்னு... நாமதான் சொஸைட்டிக்காக எதுவுமே செய்றதில்லையே. இதை மட்டும் ஏன் செய்யணும்" 
"இப்ப என்னதான் செய்யணும்.?" 
"சிம்பிளா சொல்றன். உன்னை காதலிக்கிறேன்னு, நாம ரெண்டுபேரும் சேர்ந்து வாழலாம்னு, என் வீட்ல வந்து இருன்னு, என்கூட என்னை முழுசா சகிச்சிட்டு வாழ வர்றியானு கேட்கிறேன்." 
இது முடியும் போதே வைரமுத்து தன் கவிதையாலும் ரஹமான் தன் இசையாலும் நம்மை கவ்வி பிடிப்பார்கள். 
நெஞ்சம் எல்லாம் காதல் ...தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா...மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய 

No comments:

சுஜாதா'ஸ் படைப்பில் இருந்து - சந்திரா