Sunday 3 November 2019

நானும் ஆசி பெற்றேன் - வாலி

T.S. ரங்கராஜன் அப்போது திருச்சி AIR - ஆல் இந்தியா ரேடியோவில் முக்கிய பணியில் இருந்தவர், சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த நல்ல கவிஞர், அது மட்டும் அல்ல சிறந்த ஓவியரும் கூட. சிறுவயதில் ஒருமுறை அவர் அத்தை வீட்டின் உல் பிரகாரத்து பெரிய சுவரில் முழு ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார், ஊரிலே நல்ல பெயர் பெற்ற பெரிய குடும்பம் என்றதனால் மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு பலரும் வந்து செல்வார்கள்.  ஒருமுறை விருந்தினராக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார் ஒரு பெண்மணி, ரங்கராஜன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் அந்த பெண்மணியை பற்றி பெரிதும் அறிமுகம் கிடையாது ஆனால் மெட்ராஸ் மாஹணத்தில் இருந்து வருகிறார் விடுதலை போராட்டத்திற்கு போராடிய ஒருவரின் மனைவி என்று மட்டுமே அறிந்து இருந்தார்கள், வந்தவர்களை அழைத்து உபசாரணை செய்தார்கள், அங்கு வீட்டின் உள்ளே வந்ததும் ஓவியத்தை பார்த்து ரசித்து பின்பு நன்கு அழ ஆரம்பித்து விட்டார்.   

அந்த ஓவியம் வேறு யாரும் இல்லை காலம் நம்மிடம் இருந்து லாவகமாக பிரித்து சென்ற கவிஞர் சுப்ரமணிய பாரதியார் தான்,  ஐயமே வேண்டாம் வந்த அந்த பெண்மணி  நமது பாரதியின் மனைவி செல்லம்மாள் பாரதி தான்  

பின்னர் இதனை அறிந்ததும் நமது ரங்கராஜன், செல்லம்மாள் அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.  

இந்த ரங்கராஜன் வேறு யாரும் இல்லை நம் அனைவர்க்கும் பரிச்சியமான வாலிப கவிஞர் வாலி தான்.

Subramaniya Bharathiyar  |  Actress Devayani (Film: Bharathi)  | Real Bharathiyar and Chellamal  |  Kavingar Vaali 



No comments:

நானும் ஆசி பெற்றேன் - வாலி - சந்திரா